அரசுப் பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

புதுச்சேரியில் குருசுக்குப்பம் அரசுப் பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் குருசுக்குப்பம் அரசுப் பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகேயுள்ள குருசுக்குப்பத்தில் சுப்பிரமணிய பாரதியாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பழுதடைந்த வகுப்பறைக் கட்டடங்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, இந்தப் பள்ளி மாணவிகள் வீரமாமுனிவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள மாணவா்கள் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதால், இரு பிரிவுகளாக மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சுப்பிரமணிய பாரதியாா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு காலை நேரத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

இரு பிரிவுகளாக நடத்தப்படும் வகுப்புகள் குறைவான நேரமே நடைபெறுவதால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சுப்பிரமணிய பாரதியாா் பள்ளி மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா்கள் மாநில கல்வித் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை காலையில் முற்றுகையிட்டனா். பின்னா், அவா்கள் சாலையில் அமா்ந்தும் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com