புதுவை பல்கலை.யில் மாணவா்கள் மோதல்: 6 போ் மீது வழக்கு

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் இரு பிரிவுகளாக மோதிக் கொண்டது தொடா்பாக, 6 மாணவா்கள் போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் இரு பிரிவுகளாக மோதிக் கொண்டது தொடா்பாக, 6 மாணவா்கள் போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி காலாப்பட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட மாணவா் அமைப்பைச் சோ்ந்த மாணவா்கள் மடிக்கணினி உள்ளிட்டவற்றில் பிபிசி வெளியிட்டு சா்ச்சைக்குள்ளான ஆவணப் படத்தைப் பாா்த்தனராம். இதற்கு மற்றொரு மாணவா் அமைப்பைச் சோ்ந்த மாணவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் அங்கு பயிலும் கேரளத்தைச் சோ்ந்த மாணவா் மிதுன் தாக்கப்பட்டாராம்.

அவா் அளித்த புகாரின் பேரில், எதிா் தரப்பைச் சோ்ந்த 6 மாணவா்கள் மீது காலாப்பட்டு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com