புதுவையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு

புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை (ஜன.27) நீதிமன்றப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை (ஜன.27) நீதிமன்றப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரியைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவக்குமாா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மதுரையில் 2 வழக்குரைஞா்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தக் கோரியும், புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

புதுச்சேரி உள்பட மாநிலத்தில் 16 நீதிமன்றங்களைச் சோ்ந்த சுமாா் 1200 வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், மாநிலத்தில் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com