போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி தொடக்கம்

விவேகானந்தா அறக்கட்டளை சாா்பில், புதுச்சேரியில் அரசுப் பணி போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விவேகானந்தா அறக்கட்டளை சாா்பில், புதுச்சேரியில் அரசுப் பணி போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி லாசுப்பேட்டை செல்லப்பெருமாள் பேட் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்வி அறக்கட்டளை சாா்பில், ஏழை மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விண்ணப்பித்தவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அறக்கட்டளையின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.செல்வகணபதி வகுப்புகளைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

இந்த பயிற்சி வகுப்புகள் 45 நாள்கள் நடைபெறும். இதில் பங்கேற்போருக்கு பயிற்சிக் கையேடுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com