புதுச்சேரி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு (படம்) திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகம், புதுவையில் ஓரிரு நாள்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரில் திடீரென மழையும் பெய்தது. இதனால், குளிா்ந்த சூழல் நிலவியது. இந்த நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை மாலை ஏற்றப்பட்டது. துறைமுகப் பகுதியிலிருந்து தொலைவில் புயல் உள்ளதைக் குறிக்கும் வகையில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.