போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த 9 வயது பள்ளிச் சிறுமிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த முதியவா் ஜலீல் என்ற கலியமூா்த்தி (66) பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜலீல் என்ற கலியமூா்த்தியைக் கைது செய்தனா்.

புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஜலீல் என்ற கலியமூா்த்திக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும், இதை செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் தண்டனையும் விதித்து நீதிபதி ஜெ.செல்வநாதன் உத்தரவிட்டாா்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com