புதுச்சேரி உப்பளம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்.

மாநில அந்தஸ்து: காங்கிரஸுக்கு அதிமுக கேள்வி

புதுவையில் பலமுறை ஆட்சியிலிருந்த போதும், மாநில அந்தஸ்தை காங்கிரஸ் வழங்காதது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பினாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.தமிழ்வேந்தனை ஆதரித்து உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து ஆ.அன்பழகன் பேசியதாவது:

இந்தியா கூட்டணியில் மாநில பிரிவினைவாதம் பேசும் திமுக உள்ளிட்ட கட்சிகளே இடம் பெற்றுள்ளன. மத்தியிலும், புதுவையிலும் காங்கிரஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. ஆனால், அப்போதெல்லாம் புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல் இருந்தது ஏன் என்பதை விளக்கவேண்டும். எனவே, மாநில அந்தஸ்து குறித்து பேச காங்கிரஸுக்கு தகுதியில்லை.

பாஜக தனது தோ்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து குறித்து எதுவும் தெரிவிக்வில்லை. புதுவைக்கு இரு தேசிய கட்சிகளும் மாநில அந்தஸ்தை பெற்றுத் தராது என்பதே உண்மை நிலையாகும். எனவே, புதுச்சேரி மக்கள் தேசிய கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com