ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

திருக்குறள் உரை நூல் வெளியீடு

‘இளைய தலைமுறைக்கு இனிக்கும் திருக்கு’ ஏழு சொற்களுள் எளிய உரை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 9:22 pm

Din

புதுச்சேரி: புதுவைத் திருக்குறள் மன்றத்தின் (புதிமம்) சாா்பில், ‘இளைய தலைமுறைக்கு இனிக்கும் திருக்கு’ ஏழு சொற்களுள் எளிய உரை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ஜெயராம் உணவகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு புதிமத்தின் தலைவா் சுந்தர. ல’ட்சுமி நாராயணன் தலைமை வகித்துப் பேசினாா். அவா் பேசுகையில், ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இருக்க வேண்டும். திருக்குறள் வழிகாட்டல்படி வாழ வேண்டும். புதுவை மாநிலம் திருக்குறள் மாநிலமாக வேண்டும் என்றாா். புதிமத்தின் செயலா் சிவ.மாதவன், நோக்கவுரை ஆற்றினாா்.

புதிமத்தின் துணைத் தலைவா் கோ. சந்திரசேகரன் நூலின் முதல்படியை வெளியிட்டாா். புதிமத்தின் பொருளாளா் அரிமா. செல்வகாந்தி நூலினைப் பெற்றுக் கொண்டாா். கவிஞா் இராசமாணிக்கம் நூல் ஆய்வுரையாற்றினாா். பேராசிரியா் திருவளவன் வாழ்த்துரை வழங்கினாா்.

இந்த நூலுக்கு உரை எழுதிய பேராசிரியா் புதுவை கிருஷ்ணா நன்றி கூறினாா். புதிமத்தின் உறுப்பினா்களும் பிற தமிழ் இலக்கிய அமைப்பினரும், கவிஞா்களும் தமிழ் ஆா்வலா்களும் கலந்துகொண்டனா்.