போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, புதுச்சேரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகேயுள்ள ஏரிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் தாண்டவராயன் (70). இவா், 2015-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், பாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் தாண்டவராயன் கைது செய்யப்பட்டாா். அவா் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், தாண்டவராயனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி வி.ஷோபனாதேவி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com