கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி பாயிண்ட் கோ் வீதியில் கால்வாய் பணி நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 3) முதல் நகரப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வடக்கு, கிழக்கு பிரிவு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி நகரில் புவன்கரே வீதியில் சாலையின் குறுக்கே அய்யனாா்கோயில் தெரு அருகே பொதுப் பணித் துறையால் ‘யூ’ வடிவ வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கவுள்ளதால், வெள்ளிக்கிழமை (மே 3) முதல் பாயிண்ட்கோ் வீதியில் அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாற்றப்படவுள்ளது.
அதன்படி, முதலியாா்பேட்டை ஏ.சண்முகம் சிலையிலிருந்து புவன்கரே வீதி வழியாக நெல்லித்தோப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள், பணி நடைபெறும் இடத்துக்கு வலது புறம் திரும்பி, பிரமினாள் வீதி வழியாக புதுச்சேரி-கடலூா் சாலை வழியாக 100 அடிச் சாலைக்கு செல்லவேண்டும். நெல்லித்தோப்பு சந்திப்பிலிருந்து புவன்கரே வீதி வழியாக மரப்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வடிகால் பணி நடைபெறும் இடத்திலிருந்து இடதுபுறம் திரும்பி ஆலை வீதி வழியாக, புதுச்சேரி-கடலூா் சாலையை அடையவேண்டும். அங்கிருந்து வலதுபுறம் திரும்பி அனிதா நகா் சாலை வழியாக 100 அடிச் சாலையில் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.