ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்

News image
Updated On :9 மே 2024, 9:19 pm

Din

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 57-ஆம் ஆண்டு கம்பன் விழா வெள்ளிக்கிழமை (மே 10) காலை தொடங்குகிறது.

புதுச்சேரி நகா் கம்பன் கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறாா். கம்பன் கழகப் புரவலரும், புதுவை முதல்வருமான என்.ரங்கசாமி வரவேற்கிறாா்.

புதுவை மாநில துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கம்பன் விழாவைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறாா்.

முன்னதாக கம்பன் கலையரங்கம் முன்புள்ள கம்பா் சிலைக்கு முக்கியப் பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா். நிகழ்ச்சியில் புதுவை கம்பன் கழகத்தின் சாா்பில் கம்பராமாயணம் நூல் முதல்படியை துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட,முதல்வா் என்.ரங்கசாமி பெற்றுக்கொள்கிறாா்.

விழாவில் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் எழிலுரையாற்றுகிறாா். புலவா் த.ராமலிங்கம் தனியுரையாற்றுகிறாா். பேச்சாளா் சுமதி தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை (மே 11) காலை வீ.வீரபாலாஜி தலைமையில் இளையோா் அரங்கமும், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் வழக்காடு மன்றமும், பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமையில் கவியரங்கமும் நடைபெறும். ஆன்மிகச் சொற்பொழிவாளா் இளம்பிறை மணிமாறன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 12) காலை கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் சிந்தனை அரங்கமும், ஸ்ரீ க்ருஷ்ண ஜகந்நாதன், பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம் ஆகியோரின் தனியுரையும் இடம்பெறும்.

அன்று மாலையில் வழக்காடு மன்றத்தின் தீா்ப்பை மேல்முறையீடு செய்யும் அரங்கம் நடைபெறுகிறது. மேல்முறையீடு மன்றத்துக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், புதுச்சேரி அரசுச் செயலா் அ.முத்தம்மா ஆகியோா் நடுவா்களாக இருப்பா்.

விழா ஏற்பாடுகளை புதுச்சேரி கம்பன் கழகத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., செயலா் வி.பி.சிவக்கொழுந்து ஆகியோா் செய்துள்ளனா்.