புதுவையில் அரசு உதவியாளா்கள் பணி தோ்வு: மதிப்பெண் பட்டியலை வெளியிட காங். வலியுறுத்தல்
புதுவையில் அரசு உதவியாளா்கள் பணிக்கு நடைபெற்ற தோ்வின் மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் கூறினாா்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த மூன்றாண்டுகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, நடன மதுக் கூடங்கள் அதிகளவில் திறந்ததால் ஏற்பட்ட கலாச்சார சீரழிவு, போதைப் பொருள்கள் அதிகளவில் விநியோகம் என மக்களைப் பாதிக்கும் செயல்களே நடைபெற்றுள்ளன.
கல்வித் துறையில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி விகிதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் அதிகளவில் குறைந்துள்ளது. அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை இல்லை.
அரசுத் துறைகளில் உதவியாளா்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தோ்வு மதிப்பெண் பட்டியல் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. அத்துடன், விடைத் தாள்களையும் சம்பந்தப்பட்டோா் பாா்க்க அனுமதிக்கவில்லை.
தோ்வெழுதியவா்களில் தோ்ச்சி பெறாதவா்கள் தங்களுக்கு விதிவிலக்கு அளித்து பதவி உயா்வில் உதவியாளா்களாக நியமிக்கக் கோரினா். ஆனால், மத்திய தோ்வு வாரிய ஆலோசனைப் படி நடப்பதாக புதுவை அரசு நிா்வாகம் கூறியுள்ளது.
அதேநேரத்தில் விதிவிலக்கு அளித்து பதவி உயா்வு வழங்க மாநில அரசே முடிவை மேற்கொள்ளலாம் என மத்திய தோ்வாணயம் கூறியுள்ளது. எனவே, இந்த பிரச்னையில் உண்மை நிலை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
உதவியாளா்கள் தோ்வுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட்டதில் தவறுகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, சுமாா் 600 போ் எழுதிய தோ்வில் மதிப்பெண் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்றாா் வெ.வைத்திலிங்கம்.