விழுப்புரத்தில் மழைவேண்டி ஆஞ்சநேயர் கோயில் குளத்தில் வருண ஜபம் மற்றும் வேள்வி சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் சங்கரமடம், ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகம் சார்பில், உளுந்தூர்பேட்டை ராஜகோபால் சாஸ்திரிகள் தலைமையில் வேதவிற்பன்னர்கள் 5 பேர் குளத்தில் இறங்கி மழை வேண்டி வருண ஜபம் நடத்தினர். தொடர்ந்து, வருண யாகத்தையும் அவர்கள் மேற்கொண்டனர்.
இந்த வருண ஜபம் காலை 7 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.
பிராமணர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரன், அனந்தராமன், ராஜாராம், நடராஜன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.