உளுந்தூர்பேட்டை வட்டார விவசாயிகள் கவனத்துக்கு...

உளுந்தூர்பேட்டையில் வட்டார விவசாயிகள் சொட்டு நீர் பாசனக் கருவி பெற விண்ணப்பிப்பதற்கான முகாம் வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் வட்டார விவசாயிகள் சொட்டு நீர் பாசனக் கருவி பெற விண்ணப்பிப்பதற்கான முகாம் வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 உளுந்தூர்பேட்டை வட்டார விவசாயிகள் 100 சதவிகித மானியத்திலும், இதரப் பகுதி விவசாயிகள் ( சிறு விவசாயிகள்) 75 சதவிகித மானியத்திலு மஞ்சள், மரவள்ளி மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு தோட்டக் கலைத் துறை சார்பில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் பெறுவதற்கான விண்ணப்ப முகாம் 20.7.2017 முதல் தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெறுகிறது.
 இதற்கு சிட்டா, அடங்கல், மண், நீர் பரிசோதனை அறிக்கை, சிறு விவசாயி சான்று சமர்ப்பித்து பயனடையலாம் என்று தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் க.முரளி தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com