மணல் திருட்டில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகளை போலீஸார் புதன்
கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக திருநாவலூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் பி.ராஜேந்திரன் மற்றும் போலீஸார் திருநாவலூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து திருநாவலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, திருக்கோவிலூர் கோட்டாட்சியருக்குத் தகவலளித்தார்.