போலீஸாரை மிரட்டிய ரௌடி கைது

விழுப்புரத்தில் போலீஸாரை மிரட்டிய ரௌடி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரத்தில் போலீஸாரை மிரட்டிய ரௌடி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் நகர காவல் உதவி ஆய்வாளர் பாலசிங்கம் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை மருதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாலையை ஆக்கிரமித்து நின்ற கீழ்ப்பெரும்பாக்கம் ஒளவையார் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுக்கு சுரேஷ் (31) என்ற ரெளடி போலீஸாரிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, சுக்குசுரேஷை, விழுப்புரம் நகர போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com