விழுப்புரத்தில் மே 22-இல் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா: ஓபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது

விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, கட்சி செயல் வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை (மே 22) நடைபெறுகிறது. இதில் திரளாக பங்கேற்க வேண்டுமென்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான இரா.லட்சுமணன் வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் மாவட்ட அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில், அதிமுக நிறுவனர் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மற்றும் கட்சி வளர்ச்சிப் பணி, உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மே 22-இல் நடைபெறுகிறது.
விழுப்புரம் பேருந்து நிலைய நகராட்சித் திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்று
கிறார்.
முன்னாள் அமைச்சர் ப.மோகன் முன்னிலை வகிக்கிறார். விழுப்புரம் மக்களவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் வரவேற்கிறார். தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு நடைபெறும் தர்மயுத்தப் போராட்டக் களத்தில் வெற்றி பெற்று, தமிழகத்தில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி மலர்ந்திட வழிகாண உள்ளதால் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக வந்து சிறப்பிக்க வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com