திண்டிவனம் கோட்ட புதிய சார்-ஆட்சியராக பிரபுசங்கர் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திண்டிவனம் சார்-ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் தருமபுரி கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் சார்-ஆட்சியராக பணியாற்றி வந்த தா.பிரபுசங்கர் திண்டிவனம் சார்-ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். ஜக்காம்பேட்டையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் தனது பணியை வியாழக்கிழமை தொடங்கினார்.