மேல்மலையனூர் வட்டம், சாத்தாம்பாடி குறுவட்டத்துக்கு உள்பட்ட மேல்நெமிலி கிராமத்தில் வரும் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு, திண்டிவனம் சார்-ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை எழுத்து மூலமாக அளித்து பயன்பெறுமாறு மேல்மலையனூர் வட்டாட்சியர் க.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.