பண்ருட்டி, கள்ளக் குறிச்சியில் உள்ள ஜவுளிக் கடைகளில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தி சாலையில் இரண்டு சகோதரர்களுக்கு சொந்தமான இரண்டு ஜவுளிக் கடைகளில் கடலூர் வருமான வரித் துறை அதிகாரி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை காலையில் சென்று, கடையின் கதவுகளை மூடிக்கொண்டு சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையானது இரவு 7 மணியைக் கடந்தும் தொடர்ந்தது. சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.
கள்ளக்குறிச்சியிலும்...இதேபோல, இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக கள்ளக்குறிச்சியில், சேலம் நெடுஞ்சாலையில் உள்ள கடையிலும் காலை 9.30 மணி முதல் வருமான
வரித் துறையினர்ஆய்வு செய்தனர்.