விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாள் விழா, திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், இணை பொதுச் செயலாளர் இசக்கி படையாட்சி, புதுவை மாநில பொறுப்பாளர் கோ.தனராஜ், மாவட்ட நிர்வாகிகள் சேது, மொ.பொ.சங்கர், முத்துக்குமார் உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.