தமிழ் அமைப்பினர் தொடர் எழுச்சி முழக்க ஆர்ப்பாட்டம் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விழுப்புரம் மாவட்டத் தமிழ் அமைப்புகள் சார்பில் தொடர் எழுச்சி முழக்க ஆர்ப்பாட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விழுப்புரம் மாவட்டத் தமிழ் அமைப்புகள் சார்பில் தொடர் எழுச்சி முழக்க ஆர்ப்பாட்டம் தியாகதுருகம்
 பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
 உலகத் தமிழ் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் புலவர் கு.சீத்தா தலைமை வகித்தார். சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் அரங்க.செம்பியான், கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலர் செ.வா.மதிவாணன், திண்டிவனம், வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவர் துரை.இராசமாணிக்கம், விழுப்புரம் சங்க இலக்கிய பொதும்பர் செயலர் கவிமாமணி சீ.விக்ரமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் முத்தமிழ்ச்சங்கச் செயலர் த.பழனிவேல் வரவேற்றார்.
 தியாகதுருகம் மவுன்ட் பார்க் பள்ளி குழுமங்களின் தாளாளர் இரா.மணிமாறன் தொடக்கவுரையாற்றினார். திருவெண்ணெய் நல்லூர் கம்பன் கழகச் செயலாளர் ம.மணிக்கவுண்டர், சங்கைத் தமிழ்ச் சங்க தலைவர் வெ.சௌந்திரராஜன், தியாகதுருகம் முத்தமிழ் சங்கத் தலைவர் பெ.நாகராசன், கல்லை தி.க.தலைவர் இராமுத்துசாமி, சங்கராபுரம் ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் முகமது ரபீப், திருக்கோவிலூர் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் துரை.ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
 எழுச்சி முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழறிஞர் கி.சுப்பிரமணியன், கவிமாமணி முத்தமிழ் முத்தன், பொன்.சுப்பிரமணியன், கச்சிராயப்பாளையம் இராசவேல், வழக்குரைஞர் தமிழ்க்குமரன், எஸ்.என்.இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
 முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் மா.கோமுகி மணியன் நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியை பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com