விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஜெய சாந்தா வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
மகளிர் நீதிமன்ற நீதிபதி திருமகள், ஏ.டி.எஸ்.பி. அனுசியா தேவி எர்னஸ்ட், விழுப்புரம் தொடக்கக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், பிக்காசோ ஆர்ட்ஸ் அகாதெமி செயலர் கஜேந்திரன், முகையூர் ஆராம்ப சுகாதார நிலைய அலுவலர் மருத்துவர் முத்துராஜ், பள்ளித் தாளாளர் செல்வி முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .