மரக்கன்று வழங்கும் விழா

சங்கராபுரம் அருகே பசுமை நட்சத்திர திட்டம் சார்பில் பொதுமக்களுக்கு மரக் கன்று வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

சங்கராபுரம் அருகே பசுமை நட்சத்திர திட்டம் சார்பில் பொதுமக்களுக்கு மரக் கன்று வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 சங்கராபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பூட்டை கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. பசுமை நட்சத்திரத் திட்டம் சார்பில் மரக்கன்று வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சீனுவாசன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சேட்டு வரவேற்றார்.
 சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் முகமது ரபி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, அப்பகுதியில் உள்ள பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டார் . பசுமை நட்சத்திர திட்டத் தலைவர் இனாயத்துல்லா, பொருளாளர் மீரான்ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com