மர்மக் காய்ச்சல் பாதித்து சிறுமி சாவு

திண்டிவனத்தில் 4 வயது  சிறுமி மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தார். 

திண்டிவனத்தில் 4 வயது  சிறுமி மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தார். 
திண்டிவனம் ரோசணை பகுதியைச் சேர்ந்தவர் ஆருணரஷித்,  கூலித்தொழிலாளி. இவரது மகள் நவியாபானு (4). நவியாபானு தனியார் பள்ளியில் 
எல்.கே.ஜி படித்து வந்தார். 
இவருக்கு வெள்ளிக்கிழமை காலை காய்ச்சல் ஏற்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் நவியாபானுவுக்கு தொண்ட கருப்பான் எனும் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை சிறுமி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com