செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியம், நாட்டார்மங்கலத்தில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடப் பணிகளை மயிலம் எம்எல்ஏ இரா.மாசிலாமணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
நாட்டார்மங்கலத்தில் அங்கன்வாடி மையம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், அங்கன்வாடி மையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரா.மாசிலாமணி ரூ.8 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பார்வையிட்ட மாசிலாமணி எம்எல்ஏ, பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்திட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
அப்போது, திமுக வல்லம் ஒன்றியச் செயலர் ஏ.எஸ்.அண்ணாதுரை, ஒன்றியப் பொருளர் தமிழரசன், ஊராட்சிச் செயலர் சௌந்திரபாண்டியன் மற்றும் வட்டாரப் பொறியாளர் குணசேகரன்
உடனிருந்தனர்.