இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் "என் வாழ்க்கை, என் கையில்' எனும் கருத்தூக்கக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். செயலர் என்.கோவிந்தராஜூ, பொருளாளர் அ.தமிழ்மணி, முன்னாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அ.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் பி.ஜான்விக்டர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை மக்கள் தொடர்பு ஆலோசகர் ராம்குமார் சிங்காரம் கலந்துகொண்டு கல்வியை வசப்படுத்துவது, போட்டிகளை எதிர் கொள்வது, வாழ்க்கையில் வெற்றி பெறுவது ஆகியவை குறித்து ஊக்க உரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கில் மாணவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜி.ஜெயசீலன் நன்றி கூறினார்.