அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை ஐந்தாம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இந்தக் கோயிலில் வழிபாட்டு குழுவினரால் சோமவார வழிபாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிவலிங்கத்
துக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.