மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அவலூர்பேட்டை கிழக்கு எல்லையில் உள்ள காளியம்மன் கோயிலின் எதிர்புறம் அரச மரத்தடியில் காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் காலபைரவருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
மேலும் காளியம்மன், பிடாரி அம்மன், தட்சணாமூர்த்தி, நாக தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள்
தரிசனம் செய்தனர்.