வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், சாலமேடு பகுதியைச் சேர்ந்த வெண்ணிமலை மகன் மணிகண்டன் (21). இவர், கடந்த ஜூலை 20-ஆம் தேதி பண்ருட்டியில் தனியாக நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.25 ஆயிரம் வழிப்பறி செய்ததாக கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார். ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பிறப்பித்த உத்தரவின்பேரில் மணிகண்டனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.