செஞ்சி திருக்குறள் பேரவை சார்பில், செஞ்சி பேருந்து நிலையத்தில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு திருக்குறளும், அதன் பொருளும் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் வகையில், கருவி அமைக்கப்பட்டு புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவைத் தலைவர் வீ.பெ.கோபிநாத், செயலர் அ.சேட்டு, பொருளாளர் அர.செல்வராஜ், துணைத் தலைவர்கள் ரா.செல்வராஜ், சீ.மாணிக்கம், இணைச் செயலர்கள்
ப.சேகர், ச.செந்தில்குமார், தணிக்கையாளர் பாண்டியன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.