சங்கராபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் பாமக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, பவுஞ்சிப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற விழாவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கோ.தனராஜ் கொடியேற்றி பேசினார். மாநில துணைப் பொதுச் செயலர் ரமேஷ், மாநில துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்டச் செயலர் பால.சக்தி, மாவட்ட அமைப்பாளர் பப்ளு, மாவட்ட துணைத் தலைவர் ராஜா, ஒன்றியத் தலைவர் பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.