செஞ்சி கிருஷ்ணாபுரம் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன், கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்லியம்மன், ராஜகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூவாத்தம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சுந்தரவிநாயகர் மற்றும் பரிவார அம்மன்களுக்கு அபிஷேக, ஆராதனை செய்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் ஒரு மணிக்கு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீபூவாத்தம்மன் கோயிலில் ஊர் மக்கள் சார்பில் ஊரணிப் பொங்கல் வைத்து முப்பெரும் அம்மன்களுக்கும் பூங்கரகம் ஜோடித்து இரவு முத்துப் பல்லக்கில் திருவீதியுலா நடைபெற்றது.
புதன்கிழமை மஞ்சள் நீராட்டுவிழா காட்சியும், மாலை 3 மணிக்கு பூங்கரகம் பிரிந்து அம்மன்கள் கோயில்களுக்கு திரும்புதல் மற்றும் காப்பு களைதல் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவினர், கிருஷ்ணாபுரம் பொது மக்கள் செய்திருந்தனர்.