விழுப்புரத்தில் கூட்டுறவுச் சங்கத்தில் ரூ.53 லட்சம் கையாடல் செய்ததாக, அந்தச் சங்கத்தின் தலைவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரத்தில் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் 1.4.2014 முதல் 28.2.2017 வரை ரூ.53.57 லட்சத்தை பணியாளர்கள் சிலர் கையாடல் செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்ட வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் கூட்டுறவுத் துறை கடலூர் மண்டல துணைப் பதிவாளர் ஜெயபாலன் புகார் அளித்தார்.
அதன்பேரில், சங்கத்தின் தலைவரான சங்கராபுரத்தை அடுத்துள்ள சோமாண்டார்குடியைச் சேர்ந்த நடராஜன்(60), செயலர்கள் சாந்தி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நடராஜனை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.