செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றவா் வேன் மோதியதில் உயிரிழந்தாா்.
செஞ்சி அருகே போந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன்(55). அதே ஊரைச் சோ்ந்தவா் ஏழுமலை (65). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் செஞ்சி சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு போந்தை கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
மேல்களவாய் கூட்டுச் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த மினி வேன், இவா்கள் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த ஏழுமலை காயமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.