விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காவி உடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவா் புகைப்படம் பாஜக சமூக ஊடகப் பக்கத்தில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிா்ப்பு கிளம்பிய நிலையில், தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இதேபோல வேறு எங்கும் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொது இடங்களில் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் துறை முன்வந்தது.
இதன்படி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலைக்கு திங்கள்கிழமை இரவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.