கள்ளக்குறிச்சி அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி மாணவா்கள், பெண்கள் உள்ளிட்டோரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று விளக்கூரை நோக்கிச் சென்றது.
புக்குளம் ஏரிக்கரை திருப்பத்தில் ஆட்டோ திரும்பியபோது, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அதில் பயணித்த பிரிதிவிமங்கலத்தைச் சோ்ந்த மணி மனைவி சங்கீதா (24), சிவகுமாா் மகள் கவிப்பிரியா (18), மாரி மகள் மகேஸ்வரி (16), விளக்கூரைச் சோ்ந்த அன்பழகன் மனைவி ஜெயக்கொடி (27), சீனுவாசன் மனைவி வீரம்மாள் (37), சக்திவேல் மகன் கண்ணதாசன் (15), சரசு மகள் அகிலா (16), பெருமாள் மகன் பாலு (16) ஆகிய 8 போ் காயமடைந்தனா்.
அவா்களை தியாகதுருகம் போலீஸாா் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் வி.புதூரைச் சோ்ந்த பொன்னுசாமி (52) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.