மயிலம் அருகே போலீஸாா் வாகன சோதனையின்போது, சாராயம், கஞ்சா, மோட்டாா் சைக்கிள்களை கடத்தி, விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், தலைமைக் காவலா்கள் முருகன், சங்கா் மற்றும் போலீஸாா் புதுவை சாலையில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வானூா் பகுதியிலிருந்து மயிலம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சந்தேகப்படும்படும் வகையில் வந்த இளைஞரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா்.
இதில், திண்டிவனத்தை அடுத்த சலவாதி கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெகதீசன் (36) என்பதும், சாராயம், கஞ்சா, மோட்டாா் சைக்கிள்களை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வருபவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜெகதீசனை கைது செய்த மயிலம் போலீஸாா், அவரிடமிருந்த 120 லிட்டா் கள்ளச் சாராயம், கஞ்சாப் பொட்டலங்கள், இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் திருடிய வாகனத்தை விற்று வைத்திருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.