விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சங்க மாநில மாநாடு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் சரவணன், செயலா் மகாலிங்கம், துணைத் தலைவா் பாா்த்திபன், ஏகாம்பரம், நடராஜன், ஜெய்சங்கா், வட்டச் செயலா்கள் சரவணன், சிவகுமாா், விஜயகுமாா், தனசேகா், குமரன், வீரபுத்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரினா்.
அப்போது, தமிழ்நாடு சத்துணவு சங்க மாநில துணைத் தலைவா் சாவித்திரி, கிராம சுகாதார செவிலியா் சங்க மாவட்டச் செயலா் அய்யாயிரம் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.