வல்லம் அருகே மேல்சேவூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் சுகாதாரம் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊா்வலத்தை பள்ளியின் தலைமை ஆசிரியா் இராஜசேகா் தொடக்கி வைத்தாா் (படம்). ஊா்வலத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்று, விழிப்புணா்வு ஏற்படுத்தியபடி தெருக்களில் ஊா்வலமாக வந்தனா். பின்னா், அனைவரும் டெங்கு ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனா். இதில் ஆசிரியா்கள் வள்ளியம்மாள், சுந்தரமூா்த்தி, செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.