வளவனூர் அருகே கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
வளவனூர், ராம்பாக்கத்தை சேர்ந்த வைத்தியநாதன் மகன் மணிகண்டன்(41). இவர், திங்கள்கிழமை அதே ஊரில் உள்ள மயானம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென மணிகண்டனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.1,500 பணத்தை பறித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, திருநாவலூர் அருகே கெடிலம் கிராமத்தை சேர்ந்த சிவராஜ்(30), திருநாவலூரைச் சேர்ந்த வானவில்(25), பாரதிராஜா(29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.