கச்சிராயப்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு இரு கோயில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள தாவடிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் உண்டியலை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு உடைத்து பணத்தை திருடிச் சென்றனராம்.
அதே போல, கச்சிராயப்பாளையத்தை அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் உண்டியலையும் மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்த காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் கச்சிராயப்பாளையம் காவல்
ஆய்வாளர் செ.வள்ளி தலைமையிலான போலீஸார் கோயில்களைப் பார்வையிட்டு, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.