அரசுப் பள்ளி ஆண்டு விழா

சங்கராபுரம் அருகே வடசெட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சங்கராபுரம் அருகே வடசெட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ரங்கநாதன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுகன்யா, ஆசிரியர் பயிற்றுநர் முருகேசன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செம்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பள்ளித் தலைமை ஆசிரியர் சி.லட்சுமி வரவேற்றார். விளையாட்டுப் போட்டிகள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 ஓய்வுபெற்ற அஞ்சல் துறை இயக்குநர் எஸ்.கந்தசாமி, சமூகப் பல்நோக்கு முன்னேற்றச் சங்கத் தலைவர் கற்பகம், இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினர்.
 கவிஞர் கலிய.செல்லமுத்து, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் பொன்.அறிவழகன், பாண்டுரங்கன், சைவ சித்தாந்தப் பேராசிரியர் ச.சம்புலிங்கம் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டிப் பேசினர். ஆசிரியர் க.ராணி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் ஹெலன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com