மயிலம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் தமாகாவினர் 100 பேர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலர் செஞ்சிமஸ்தான் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களை செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, மயிலம் எம்எல்ஏ இரா.மாசிலாமணி, முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், ஒன்றியச் செயலர் மணிமாறன், மாவட்ட பிரதிநிதி ஜெயபாலன், சிறுபான்மை அணி அமைப்பாளர் அன்ஸாரி, மாணவரணி துணை அமைப்பாளர் ரிஸ்வான், தொண்டர் அணி பாஷா உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.