கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மா.கோமுகி மணியன் கல்வராயன்மலைப் பகுதி கிராமங்களில் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.
வெள்ளிமலை, இன்னாடு, கிளாக்காடு, சேராப்பட்டு, மூலக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்குச் சென்ற அவர், அமமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள திட்டங்களை எடுத்துக் கூறியும், அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தும் வாக்கு சேகரித்தார்.
கல்வராயன்மலை ஒன்றியச் செயலாளர் எம்.ஜி.ஆர். சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர் ராஜீவ்காந்தி, மாவட்ட துணைச் செயலர் ராஜீவ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.