விழுப்புரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் இனியவன் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (43). இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
விழுப்புரத்தில் சுமை தூக்கும் தொழிலாளிகளாக உள்ள இவர்களுக்கு இடையே மது போதையில் சந்தைத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, இனியவன் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜெயப்பிரகாஷ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், இனியவன் மீது விழுப்புரம் மேற்கு போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.