மகன் மாயமானது குறித்து அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விக்கிரவாண்டி தாலுகா, பனைமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் (80) மகன் சிவலிங்கம் (எ) விசுலிங்கம். இவர் கடந்த 20-ஆம் தேதி இரவு சைக்கிளில் வெளியே சென்றார்.
அதன்பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அனந்தபுரம் காவல் நிலையத்தில் வீரம்மாள் புகார் அளித்தரார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.