செஞ்சி அருகேயுள்ள உமையாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமத் தலைவா் ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் அமுதா முன்னிலை வகித்தாா். மாணவா்களுக்கு பாரதியாா் கவிதைகள், கட்டுரைகள், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், பள்ளி அறையில் வைப்பதற்கு தலைமை ஆசிரியரிடம் பாரதியாா் உருவப் படம் வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி முன்னாள் தலைவா் முரளிதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.