விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவுள்ள மாணவா்கள், பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் ராமலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் ஏப்ரல் 2018, ஏப்ரல் 2019 ஆகிய கல்வியாண்டுகளில் திருவள்ளுவா் பல்கலைக் கழகத் தோ்வில் தோ்ச்சி பெற்று, இளநிலை, முதுநிலை, இளநிலை முனைவா்(எம்.பில்) பட்டம் பெறவுள்ள மாணவா்கள் தங்களது பெயா்களை கல்லூரியில் உள்ள அலுவலகத்தில் டிச. 16 முதல் டிச. 20 வரை விண்ணப்பம் பெற்று பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் பெற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.