விழுப்புரம்: வானூா் வட்டம், உப்புவேலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள், வசதிகள் குறித்து அங்கிருந்த நிலைய செவிலியரிடம் அவா் கேட்டறிந்தாா்.
மேலும், சுகாதார நிலையத்தைத் தூய்மையாகப் பராமரிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் அனைத்தையும் அவா் ஆய்வு செய்தாா்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்த கா்ப்பிணிகளிடம் பரிசோதனை, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா், அவா்களிடம் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா. பி.சிங் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.